நண்பரின் மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்

by Staff / 20-08-2023 01:11:14pm
நண்பரின் மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்

டெல்லியில் நண்பரின் மகளை அரசு அதிகாரி ஒருவர் பல முறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில், நண்பரின் 14 வயது மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2020ம் ஆண்டில் நண்பர் உயிரிழக்கவே, தனது வீட்டில் அச்சிறுமியை தங்க வைத்துள்ளார்; கர்ப்பமடைந்த தனக்கு அதிகாரியின் மனைவி கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுத்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுமி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

 

Tags :

Share via