சட்டப்பேரவையிலும் ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல் பரபரப்பு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் ஓபிஎஸ் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என்ற இபிஎஸ் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகளும் மாற்றப்படவில்லை. இதனால் சட்டபேரவை கூட்டத்தொடரில் ஈபிஎஸ் தரப்பு எல்.எல்.ஏக்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. தொடர்ந்து சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்தபின் அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவை மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
Tags :