ஜெனீவாவில் நடைபெற்ற  அமெரிக்கா மற்றும்  ஈரான் இடையிலான  மூன்றாம்  கட்ட  அணுசக்தி பேச்சுவார்த்தை,

by Admin / 27-02-2026 01:13:44pm
ஜெனீவாவில் நடைபெற்ற  அமெரிக்கா மற்றும்  ஈரான் இடையிலான  மூன்றாம்  கட்ட  அணுசக்தி பேச்சுவார்த்தை,

ஜெனீவாவில் நடைபெற்ற  அமெரிக்கா மற்றும்  ஈரான் இடையிலான  மூன்றாம்  கட்ட  அணுசக்தி பேச்சுவார்த்தை,  குறிப்பிடத்தக்க  முன்னேற்றத்துடன் முடிவடைந்தது.  ஓமன்  நாட்டின்  வெளியுறவு அமைச்சரான  சையித்  பத்ர்  அல்பு சைதி  இந்த பேச்சுவார்த்தையை ஒருங்கிணைத்தார். இரு தரப்பினரும் புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ரஈரானின் அணுசக்தித் திட்டம்  மற்றும்  பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து   விவாதிக்கப்பட்டது.
இந்த வார இறுதியில், ஆலோசனைகளுக்காக குழுக்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்புகின்றன. அடுத்த வாரம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், போரைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக இந்தப் பேச்சுவார்த்தை பார்க்கப்படுகிறது. 

 

Tags :

Share via