"எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகள் வேண்டும்" தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

by Editor / 17-06-2025 04:23:07pm

எந்த கூட்டணிக்கு சென்றாலும் 40 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது, "நமக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, கூட்டணியில் அந்த தொகுதிகளை கேட்டு பெற வேண்டும். அதிமுக சென்ற முறை நமக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை. யார் சரியான ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த கட்சியிடம் கூட்டணி வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
 

 

Tags :

Share via