இளம்பெண்ணை கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
செங்கல்பட்டு அருகே இளம்பெண்ணை கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமைசெய்த இளை ஞரைகைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கூட்டாளிகளை தேடி வருகின்றனர். ஆத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர் கடந்த 25ஆம் தேதி செங்கல்பட்டு காஞ்சிபுரம் பைபாஸ் சாலை பேருந்து நிலையத்தில் வேலூர் செல்வதற்காக நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஆத்தூரை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அப்பெண்ணை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து விட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான சரவணனை கைது செய்தனர்.
Tags :