3 ஊழியர்களை கொன்ற கொள்ளையர்கள்

by Admin / 28-02-2022 02:51:35pm
 3 ஊழியர்களை கொன்ற கொள்ளையர்கள்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் புபேந்திரா, புஷ்பேந்திரா, நரேஷ். இவர்கள் 3 பேரும் அரியானா மாநிலம் குர் கிராம் பகுதியில் உள்ள ஒரு தனியார் இயற்கை எரிவாயு கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று இரவு இவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஒரு மர்ம கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கம்பெனிக்குள் புகுந்தது.

அவர்கள் 3 ஊழியர்களையும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த 3 ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மர்ம கும்பல் வந்திருக்கலாம் என்றும், திருட்டை தடுக்கும் போது 3 பேரையும் அவர்கள் கொடூரமாக தாக்கி கொன்று இருக்கலாம் என்றும் தெரிய வந்தது.
 

 

Tags :

Share via