ரூ.50 லட்சம் மோசடி: பாஜக மத்திய அமைச்சரின் உதவியாளர் மீது வழக்குபதிவு
மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக மத்திய அமைச்சரின் உதவியாளர் உட்பட நான்கு பேர் மீது பாஜக பிரமுகர் புவனேஷ் குமார் கொடுத்த புகாரில் பாண்டிபஜார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆரணி நகர தலைவர் புவனேஸ்வர் தனக்கு ஆரணி தொகுதியிலும், அல்லது தனது சகோதரிக்கு திருவண்ணாமலை தொகுதியிலும் எம்எல்ஏ சீட்டு தருவதற்கு 50 லட்ச ரூபாயை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளராக இருந்த நரோத்தமன் மற்றும் பாஜக உறுப்பினர் விஜயராமன் உள்ளிட்ட 4 பேரிடம் கொடுத்து ஏமாந்ததாக புகார் அளித்திருந்தார். ஒரு கோடி ரூபாய் கேட்ட நிலையில் 50 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்த தாக புகாரில் தெரிவித்துள்ளார்.இந்தப் புகாரின் அடிப்படையில் பாண்டிபஜார் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் மத்திய அமைச்சரின் உதவியாளராக இருந்த நரோத்தமன் மற்றும் தந்தை சிட்டிபாபு, விஜயராமன், சிவபாலாஜி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags :