பள்ளி மாணவன் இறப்புக்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம்

by Staff / 02-09-2024 01:42:41pm
பள்ளி மாணவன் இறப்புக்கு நியாயம் கேட்டு ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் வரகூரில் கடந்த வாரம் பள்ளி மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்ட தகராறில் ஒரு மாணவன் உயிரிழந்தார். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இறந்த மாணவனுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு இன்று(செப்.02) காலை அனைத்து சமூக அமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கல்வித்துறை அதிகாரியை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via