பறந்து கொண்டிருந்த விமானத்தில் மயங்கி விழுந்த பயணி பலி

by Editor / 11-09-2022 03:22:20pm
பறந்து கொண்டிருந்த விமானத்தில் மயங்கி விழுந்த பயணி பலி

துபாயிலிருந்து நேற்று (செப்டம்பர் 10) கேரள மாநிலம் கொச்சின் நோக்கி புறப்பட்ட விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் நடுவானில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருக்கு விமானத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பின் கொச்சின் விமான நிலையத்திற்கு வந்த உடன் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்து போன விமான நிலைய ஊழியர்கள், இதுகுறித்து போலீசாருக்கும் பயணியின் குடும்பத்தாருக்கும் தகவல் கொடுத்தனர்

 

Tags :

Share via