1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொல்லை கல்லூரி மாணவர் கைது.

by Editor / 09-03-2025 10:59:47am
1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொல்லை கல்லூரி மாணவர் கைது.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏந்தலூர் கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் சந்திரன் மகன் செல்வம் தனியார் கல்லூரியில் இராண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இரண்டு நாள்களுக்கு முன்பு அதே ஊரில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்த அடிப்படையில்  ஊத்துமலை ஆய்வாளர் வனசுந்தர் வீ. கே. புதூர் உதவி ஆய்வாளர் பவுல்  மற்றும் காவலர்கள் சமூக நல குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் சிறுமியிடம் விசாரணை செய்தனர்  சிறுமியின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வராத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் கொடுத்தனர் அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதியபட்டு செல்வம் பாளை சிறையில் அடைத்தார்கள் சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கபட்டு இருப்பதை தெரிந்தும் பெற்றோர்  புகார் கொடுக்க முன்வரவில்லை மாவட்ட நிர்வாகம் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்

 

Tags : 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல்தொல்லை கல்லூரி மாணவர் கைது.

Share via