JEE தேர்வுக்கு தயாரான மாணவர் திடீர் தற்கொலை

by Staff / 16-06-2024 03:56:33pm
JEE தேர்வுக்கு தயாரான மாணவர் திடீர் தற்கொலை

பீகார் மாநிலம் மோதிஹாரியை சேர்ந்த ஆயுஷ் ஜெய்ஸ்வால் (17) என்ற மாணவர், ராஜஸ்தானின் கோட்டா நகரின் மகாவீர் நகர் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக தங்கி ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (ஜூன் 15) இரவு அந்த மாணவர் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மாணவனின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, மாணவரின் இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாராணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via