மியான்மரில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

by Staff / 20-09-2022 05:14:32pm
மியான்மரில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via