கள்ளக்காதலிக்காக புதிய கள்ளக்காதலனைக்கொலைசெய்த பழைய கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.

by Editor / 18-09-2024 09:51:20pm
கள்ளக்காதலிக்காக புதிய கள்ளக்காதலனைக்கொலைசெய்த பழைய கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புல்லுக்காட்டு வலசை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற கணவரை இழந்து வாடும் பெண்ணுக்கும் முத்துமாலைபுரம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் வேணிக்கு புளிச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகனான ஆட்டோ ஓட்டுநராக ஆனந்த் என்பவருடான் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்யாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இருவருக்கும் இடையேயான உறவை பலமுறை ஏற்கனவே  வேணியோடு தொடர்பிலிருந்த அசோகன் கண்டித்ததாக கூறப்படுகிறது இதன் தொடர்ச்சியாக கடந்த 2016 ஆம் ஆண்டு அசோகன் வேணி வீட்டிற்கு சென்ற பொழுது தனிமையில் ஆனந்த்- வேணியும் இருப்பதைக் கண்ட அசோகன் ஆனந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதன் தொடர்ச்சியாக அன்று ஆனந்தை  பின் தொடர்ந்து சென்ற அசோகன் தனது இருசக்கர வாகனத்தை வைத்து ஆனந்த் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி மறைத்து வைத்திருந்த அரி வாளால் ஆனந்த்தை வெட்டி  கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அசோகன் என்பவரை இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கை விசாரணை செய்த நீதிபதி மனோஜ் குமார் குற்றவாளிக்கு ஆயுள்  தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Tags : கள்ளக்காதலிக்காக புதிய கள்ளக்காதலனைக்கொலைசெய்த பழைய கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.

Share via