எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகை விற்பனை மந்தம் விலை

by Admin / 16-06-2024 03:46:52pm
எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகை விற்பனை மந்தம் விலை

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகை விற்பனை மந்தம் விலை அதிகமாக இருந்ததால்  விற்பனை குறைவு

கடந்த ஆண்டு 6 கோடி ரூபாய் ஆடுகள் விற்பனையான நிலையில் இந்தாண்டு 4 கோடி ரூபாய்க்கு விற்பனை.

எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. இங்கு வாரம் தோறும் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுவது வழக்கம். மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தென்காசி, விருதுநகர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்குவந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.இங்கு சாதாரண வாரங்களிலேயே ஒருகோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாவது வழக்கம். தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பல கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாவது வழக்கம். அந்தவகையில் வரும் 17ந்தேதி (திங்கள் கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நேற்று மாலை முதல் வியாபாரம் தொடங்கியது 

வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு, கொடி ஆடு  என பலதரப்பட்ட வகைகள் கொண்ட 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.7 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி 9000 ரூபாயும், எடைக்கு ஏற்ப 33 ஆயிரம் வரை விற்பனை இருந்தது. ஜோடி ஆடு 15 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குர்பாணி கொடுக்க வேண்டும் என்பதால் அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டுகளை விட ஆடுகளின் விலை அதிகமாக இருந்ததால் விற்பனை மந்தமாகவே இருந்தது. மேலும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலை அதிகமாக இருக்கும் என்பதால் இதற்கு முந்தைய வாரங்களில் நடைபெற்ற சந்தைகளில் ஆடுகளை வாங்கியதால் இன்று விற்பனை குறைவாக இருந்தது.

கடந்த ஆண்டு 6 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்ற நிலையில் இன்று 4 கோடி ரூபாய் மட்டுமே விற்பனை நடைபெற்றுள்ளது.

 

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் பக்ரீத் பண்டிகை விற்பனை மந்தம் விலை
 

Tags :

Share via