எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்

by Staff / 24-03-2022 02:42:05pm
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவேறு சம்பவத்தில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கைது செய்த இலங்கை கடற்படை அவர்களை மயிலாட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 12 பேரை இரணைதீவு அருகே கடற்படையினர் கைது செய்து முழங்காவில் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு பிறகு 16 மீனவர்களும் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via