உறவினரை கத்தியால் குத்தி கொன்ற நபர் கைது

by Admin / 27-01-2022 02:51:39pm
உறவினரை கத்தியால் குத்தி கொன்ற நபர் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமணித் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சொறி (எ) சதீஷ். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். 

இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் இருந்து வரும் நிலையில், சதீஷின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் அவரது உறவினரான ரஞ்சித் கடந்த பல ஆண்டுகளாக தனது வீட்டின் வெளியேயும், மாடியிலும் புறாக்களை வளர்த்து வந்துள்ளார். 

அதைக் காரணமாக வைத்து ரஞ்சித் வீட்டிற்கு பல நண்பர்கள் வந்து சென்றதால் அதை சதீஷ் கண்டித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று மாலை வீட்டருகே நடைபெற்ற மற்றொரு உறவினர் குழந்தையின் பிறந்தநாள் நிகழ்ச்சியொன்றில் ரஞ்சித் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் பங்கேற்றபோது அங்கும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை நடந்துள்ளது.

இதனையடுத்து நிகழ்ச்சிக்குப் பின் சதீஷ் நேற்றிரவு 10.30 மணியளவில் தனது வீட்டின் மாடியில் மது அருந்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ரஞ்சித்துடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு கைகலப்பானதில் ரஞ்சித் தனது நண்பருடன் சேர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷை நெஞ்சு பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் ரத்தக் காயத்துடன் கிடந்த ரஞ்சித்தை மீட்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்-க்கு தகவல் அளித்து பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார் சதீஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தி தப்பியோடிய ரஞ்சித் மற்றும் அவரது நண்பரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 
 

 

Tags :

Share via