திருச்சி விமான நிலையத்தில் 50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

by Staff / 10-10-2022 04:00:03pm
திருச்சி விமான நிலையத்தில் 50 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா சிங்கப்பூர் இலங்கை துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பகுதியிலிருந்து விமானங்கள் வந்து செல்கின்றன இந்நிலையில் துபாயில் இருந்து நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது விமானத்திலிருந்து இறங்கி வந்த பயணிகளை சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்ததில் திருச்சியை சேர்ந்த கவிராஜ்ராமசாமி என்பவரிடம் இருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ளான ஒரு கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் நேற்று முன்தினமும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நேற்று ஒரு கிலோ தங்கம் விமான நிலைய சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via