மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் நீட்டிப்பு

by Staff / 18-04-2024 03:05:21pm
மணீஷ் சிசோடியா நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. முன்னதாக விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, போலீசார் அவரை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணைக்குப் பிறகு ஏப்ரல் 26ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் பணமோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via