பீரோவின் எதிரே சிசிடிவி பொருத்தி கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்

by Staff / 21-03-2022 04:40:06pm
பீரோவின் எதிரே சிசிடிவி பொருத்தி கையும் களவுமாக பிடித்த உரிமையாளர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். பெட்டிக்கடை நடத்திவரும் இவரது பேத்தியை குளிப்பாட்டுவதற்காக கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த நான்கு மாதங்களாக வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகள் காணாமல் போவதை கண்டு சந்தேகமடைந்த குணசேகரன் வீட்டில் பீரோவிற்கு எதிராக யாருக்கும் தெரியாமல் சிடிவி கேமராவை பொருத்தி வைத்து கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிசிடிவி கேமராவை தொடர்ந்து பார்த்து வந்ததில் வீட்டிற்கு வந்து செல்லும் லட்சுமி யாரும் இல்லாத நேரத்தில் பீரோவை திறந்து நகை எடுப்பது தெரியவந்தது.
 
இதன் பின்னர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டிற்கு தண்ணீர் ஊற்ற வந்தலட்சுமியை போலீசார் கைது செய்து 5 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை வீட்டின் உரிமையாளர் எலிக்கு பொறி வைப்பது போல் சிசிடிவி கேமராவை வைத்து நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை சாமர்த்தியமாக வீட்டின் உரிமையாளர் பிடித்து கொடுத்திருப்பதற்கு காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.
 

 

Tags :

Share via