விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு.

by Staff / 14-08-2024 12:44:04pm
விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு.

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் விமான நிலைய உள் மற்றும் வெளி வளாகத்தை கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 15 இந்திய நாட்டின் சுதந்திர தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். , இந்தாண்டு 78-வது சுதந்திர தினம் நாளை வெகு விமர்சியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அதனை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக விமான நிலைய உள்வளாகம், வெளிவளாகம், அதிவிரைவு அதிரப்படை என மூன்று பிரிவுகளும், தமிழக காவல்துறை சார்பில் வெளி வளாகம் மற்றம் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி என மொத்தம் 3 அடுக்கு பாதுகாப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும். , விமான நிலையத்திற்கு பயணிகள் கொண்டு வரும் வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகிறது. வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், மோப்ப நாய்கள் மூலம் பயணிகள் உடமைகளை சோதனை செய்யப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

 

Tags :

Share via