முல்லைப் பெரியாறில் துணை கண்காணிப்பு குழு இன்று ஆய்வு

by Editor / 17-08-2023 10:20:02am
 முல்லைப் பெரியாறில் துணை கண்காணிப்பு குழு இன்று ஆய்வு

முல்லைப் பெரியாறு அணையில் 5பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு மேற்கொள்கின்றனர். 3 மாதங்களுக்கு பின் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் தலைமையில் துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர். முல்லைப்பெரியாறு அணையின் பிரதான அணை, பேபி அணை மதகுப்பகுதிகள், சுரங்கப்பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர். பருவமழை காலங்களில் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு நடக்கிறது.

 

Tags :  முல்லைப் பெரியாறில் துணை கண்காணிப்பு குழு இன்று ஆய்வு

Share via