ராகுல் காந்திக்கு சிஐடி போலீஸ் சம்மன்

by Staff / 20-02-2024 11:20:31am
ராகுல் காந்திக்கு சிஐடி போலீஸ் சம்மன்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு அசாம் சிஐடி போலீசார் திங்கள்கிழமை சம்மன் அனுப்பியுள்ளனர். பிப்ரவரி 23ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் கவுகாத்தியில் நுழைந்தபோது ஏற்பட்ட மோதல் காரணமாக பதற்றம் உருவானது. இந்த வழக்கில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களான கே.சி.வேணுகோபால், ஜிதேந்திர சிங், பூபேன் குமார் போரா, கவுரவ் கோகோய், டெப்ரதா சைகியா ஆகியோருக்கு போலீசார் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

 

Tags :

Share via