கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

by Staff / 14-05-2022 02:42:23pm
கட்சியை வலுப்படுத்த வருமாறு நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உத்யுரில் தொடங்கியது. தொடக்க நாளான நேற்று உரை நிகழ்த்திய சோனியாகாந்தி கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட லட்சியங்களுக்கு மேலாக கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். கட்சியில் மாற்றங்கள் செய்ய வேண்டியது காலத்தின் தேவை என்றும் குறிப்பிட்ட செயல் முறையை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

Tags :

Share via