44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமர் மோடி வருகை -ட்ரோன்கள் பறக்க தடை

by Editor / 26-07-2022 09:40:42pm
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமர் மோடி வருகை -ட்ரோன்கள் பறக்க தடை

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதன் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதையொட்டி பிரதமர் மோடி. 28.07.2022 மற்றும் 29.097.2022 ஆகிய 2 நாட்கள் சென்னை வருகை தர இருப்பதால் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 நாட்கள், டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags : 44th Chess Olympiad Prime Minister Modi Visit -Drones Banned

Share via