ஈரோடு கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக மாடுகள் விற்பனை

by Admin / 10-03-2022 02:23:21pm
ஈரோடு கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக மாடுகள் விற்பனை

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 5 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக மாடுகள் விற்பனை ஆகின.

தமிழகத்தில் இரண்டாவது பெரிய கால்நடையை சந்தையாக விளங்கும் புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.

இன்றைக்கு நாட்டு மாடு ஜெர்சி சிந்து கலப்பின வகை மற்றும் கன்று குட்டிகள் என 600க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தனர்.

நாட்டுமாடு 50,000 முதல் 72 ஆயிரம் வரையிலும் ஜெர்சி மாடு 22 ஆயிரம் முதல் 38 ஆயிரம் வரையிலும் சிந்து மற்றும் கலப்பின வகை மாடுகள் ரூபாய் 20 ஆயிரம் முதல் 32 ஆயிரம்  வரையிலும் விலை போனது

 

Tags :

Share via