மது போதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது

by Staff / 14-05-2022 02:50:35pm
மது போதையில் காரை ஓட்டி இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது


புதுச்சேரியில் மது போதையில் காரை ஓட்டி சாலையில் சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்திய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டான். புதுச்சேரி ரயில் நிலையம் அருகே வேகமாக காரை ஓட்டிச் சென்ற போலீசார் உதவியுடன் மக்கள் மடக்கிப் பிடித்தனர். காரில் இருந்த நபர் உச்சகட்ட போதையில் இருப்பது தெரியவந்தது அடுத்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த நபர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஆறுமுகம் என்ற ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

 

Tags :

Share via