ஹமாஸ் தாக்குதல்; இஸ்ரேலில் மலையாளி ஒருவர் பலி
இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். கொல்லத்தைச் சேர்ந்த நிபின் மாக்ஸ்வெல் என்பவர் தாக்குதலில் பலியானார். கலீலி ஃபிங்கரில் மொஷாவ் என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் மேலும் இரண்டு மலையாளிகள் உள்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வேளாண்மை பணிக்காக கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :