உதகையில் 10 முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி

by Staff / 03-05-2024 01:14:08pm
உதகையில் 10 முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் வரும் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி வரும் 10ஆம் தேதி தொடங்கவுள்ளது. 20ஆம் வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில், 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி தனியாக நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.கோடை விடுமுறை என்பதால், உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாதளங்களுக்கு மக்கள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர்.

 

Tags :

Share via