சேலம் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

by Staff / 12-06-2024 04:24:34pm
சேலம் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சேலம் மாவட்டம் சொக்கம்பட்டி அரூர் நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற 2 பைக் மற்றும் லாரியில் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெசிகா என்ற 10 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனியார் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

 

Tags :

Share via