கோவில்பட்டியில் டிரைவர் தூக்கிட்டு  தற்கொலை 

by Editor / 06-08-2021 05:30:59pm
கோவில்பட்டியில் டிரைவர் தூக்கிட்டு  தற்கொலை 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள மந்தித்தோப்பு, பெரியார் நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ணசாமி (வயது 28). இவர், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி நந்தினி பிரபா.

இவர்களுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றரை வயதில் மனோஜ்குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று .கிருஷ்ணசாமி, மனைவியிடம் பெட்ரோல் போடுவதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறினாராம் இந்த நிலையில் .கிருஷ்ணசாமி  வீட்டில் மனைவி சேலையினை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கணவர் கிருஷ்ணசாமி சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார் மனைவி. கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்கள்,

 

Tags :

Share via