15 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

by Staff / 11-04-2024 12:18:40pm
15 குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், கல்லூர் மண்டலம் சின்னதேகூரில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. உகாதி பண்டிகை நாளில் மின்விளக்குகள் அமைக்கும் பணியின் போது மின்கசிவு ஏற்பட்டு 15 குழந்தைகள் பலத்த காயம் அடைந்தனர். குழந்தைகள் அனைவரும் கர்னூல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், பல குழந்தைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான முழு விவரம் இன்னும் தெரியவரவில்லை.

 

Tags :

Share via