கோர்ட் முன் தீக்குளித்த நபர்

by Staff / 20-04-2024 03:56:32pm
கோர்ட் முன் தீக்குளித்த நபர்

அமெரிக்காவின் மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமையன்று ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பணப்பட்டுவாடா வழக்கில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளித்துள்ளார். அந்த நபரை Maxwell Azzarello என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இதில் பலியானவரின் உடல் தீயில் கருகியது. போலீசார் தீயை அணைத்து, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via