ஆணவக் கொலை: பறிபோன இரு உயிர்கள்

by Staff / 23-04-2024 01:22:40pm
ஆணவக் கொலை: பறிபோன இரு உயிர்கள்

சென்னை பள்ளிக்கரணியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் ஷர்மிளா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன் ஆணவக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஷர்மிளா கணவரின் கொலைக்கு தக்க நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். கோமா நிலையில் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Tags :

Share via