ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஏழு மாத கர்ப்பிணி பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்

by Staff / 03-05-2024 11:20:50am
ரெயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஏழு மாத கர்ப்பிணி பெண் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் திரிசூலம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சுரேஷ்குமார் இவர் தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் மேல் நிலைய நல்லூர் கிராமத்தில் உள்ள கோவில் சித்திரை திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்தினர் 11 பேருடன் சென்னையில் இருந்து நேற்று மாலை கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்று கொண்டிருந்தனர் இந்த ரெயில் நேற்று இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த பூ.மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது சுரேஷ்குமார் மனைவி கஸ்தூரி என்ற 21 வயது பெண் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு திடீரென ரயிலில் ஏற்பட்ட வாந்தி மயக்கம் காரணமாக ரயில் படியில் நின்று வாமிட் எடுத்தபொழுது திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார் இதில் தலையில் பலத்த காயமடைந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது பற்றி தகவல் அறிந்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயிவ்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....

 

Tags :

Share via