சிக்கியது 3 வது சிறுத்தை.

by Editor / 22-05-2024 10:13:29am
சிக்கியது 3 வது சிறுத்தை.

பாபநாசம் வனச்சரகம்  சுற்றியுள்ள வேம்பையாபுரம் மற்றும் அணவன் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தைகளை துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் அவர்களது உத்தரவின்படி வனச்சரக அலுவலர் திரு சத்தியவேல் அவர்களது தலைமையில் வேம்பையாபுரம் மற்றும் அணவன் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி தெரியும் சிறுத்தைகளை பிடிப்பதற்கு கூண்டு வைக்கப்பட்டது. 17.05.24 அன்று வேம்பையா புறத்தில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது அதனை அம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டது. மேலும் துணை இயக்குனர் அவர்களது அறிவுறுத்தலின்படி வேம்பியாபுரம் மற்றும் அணவன் குடியிருப்பு பகுதியில் 3 கூண்டுகள் வைக்கப்பட்டது. மேலும் பாபநாசம் வனச்சரக வனப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்பு மூலம் நேற்று 21.05.24
அணவன் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று சிக்கிய நிலையில், தொடர் கண்காணிப்பு பணியில் இருந்தபோது இன்று 22.05.2024 அதிகாலை மீண்டும் வேம்பியாபுரத்தில் சிறுத்தை ஒன்று கூண்டில் சிக்கியது இதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதற்கு துணை இயக்குனர்  தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

 

Tags : சிக்கியது 3 வது சிறுத்தை.

Share via