தண்ணீரின்றி தவிக்கும் தலைநகர்! உச்சநீதிமன்றத்தை அணுகிய அரசு

by Staff / 31-05-2024 01:50:01pm
தண்ணீரின்றி தவிக்கும் தலைநகர்! உச்சநீதிமன்றத்தை அணுகிய அரசு

தலைநகர் டெல்லியில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதால், அண்டை மாநிலங்களிடம் இருந்து கூடுதல் நீர் ஒதுக்கீடு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. கடும் வெப்ப அலை காரணமாக டெல்லியில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லியில் நீர் தேவை அதிகரித்துள்ளதால், அடுத்த ஒரு மாதத்திற்கு ஹரியானா, உத்தரபிரதேசம், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்கள் கூடுதல் நீரை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளது.

 

Tags :

Share via