8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- ரவுடி கைது

by Staff / 14-06-2024 11:28:44am
8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- ரவுடி கைது

சென்னை ஆயிரம் விளக்கில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி இந்த அநாகரிகமான செயலை தட்டிக் கேட்ட மாணவியின் பெரியம்மா மீதும் ரவுடி தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து, மாணவி தரப்பில் அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து ரவுடி தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்த நிலையில் காவல் நிலைய குளியலறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்ததால் கை உடைந்து ரவுடிக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via