கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது விபரீதம்

by Staff / 18-05-2022 03:26:10pm
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது விபரீதம்

புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்  பணியின்போது விஷவாயு தாக்கியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். திருவண்டார்  கோவில் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றிருக்கிறார். அவர் கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கியபோது ரமேஷை விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த நபர் காப்பாற்ற முயன்றும் முடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் ரமேஷை  சடலமாக மீட்டனர்.

 

Tags :

Share via