மசாஜ் சென்டரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் 8 ஆண்கள் என 24 பேர் கைது.

by Editor / 30-06-2024 08:43:55pm
மசாஜ் சென்டரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் 8 ஆண்கள் என 24 பேர் கைது.

மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் வந்ததை அடுத்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் இன்று ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 இதில் புதூர் கற்பக நகர் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 ஆண்கள் 8 பெண்கள் கைது செய்யப்பட்டனர். காக்கா தோப்பு பகுதியில் தனியார் விடுதியில் சென்னையைச் சேர்ந்த 3 பெண்கள் 2 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். 

அதேபோன்று தமிழ் சங்கம் ரோட்டில் தனியார் விடுதியில் மூணாறு பகுதியைச் சேர்ந்த பெண்கள்  உட்பட 5 பெண்கள் ஒரு ஆண் உள்பட இன்று ஒரே நாளில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 24 பேர் கைது ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால்  அதிரடியாக கைதுசெய்யப்பட்டனர்.

 

Tags : மசாஜ் சென்டரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் 8 ஆண்கள் என 24 பேர் கைது.

Share via