15 வயது சிறுமியை சீரழித்த 66 வயது முதியவர்... போக்சோ சட்டத்தில் கைது...

by Admin / 12-08-2021 11:32:20am
15 வயது சிறுமியை சீரழித்த 66 வயது முதியவர்... போக்சோ சட்டத்தில் கைது...

வந்தவாசி அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது.
 
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 66 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். லாரி ஓட்டுநர் தலைமறைவானார்.

வந்தவாசி அடுத்த மழுவங்கரணை கிராமத்தில் 15 வயது சிறுமி ஏரிக்கரை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 66 வயது முதியவர் அப்துல் ஜலீல் என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுமியை ஆசை வர்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைப் பார்த்த அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அலாவுதீன் என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இந்த நிலையில் 15 வயது சிறுமியின் உடல் நிலை மாற்றம் காரணமாக சிறுமியின் பெற்றோர்கள் சந்தேகம் அடைந்தனர் இது எடத்து சிறுமியிடம் விசாரணை செய்தபோது  66 வயது முதியவர் அப்துல் ஜலீல் மற்றும் லாரி ஓட்டுநர் அலாவுதீன் ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து போலீசார் முதியவர் அப்துல் ஜலீல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் லாரி ஓட்டுனர் அலாவுதீனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via