பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

by Staff / 15-07-2024 02:27:41pm
பா.ஜ.க. நிர்வாகி கேசவ விநாயகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கில் பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இவ்வழக்கில் அவர் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனுக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக சிபிசிஐடி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், கேசவ விநாயகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via