தென்காசிக்கு வருகை தந்த வீ.கே.சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

by Editor / 17-07-2024 01:10:55am
தென்காசிக்கு வருகை தந்த வீ.கே.சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகம் முழுவதும்  வீ.கே.சசிகலா தனது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.  இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்கம் தென்காசி அடுத்துள்ள காசிமேஜர்புரம் பகுதியில் இருந்து துவங்க உள்ளது. இந்த சுற்று பயணத்திற்காக விமான மூலம் மதுரை வந்தடைந்த விகே சசிகலா பின்னர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் குற்றாலம் நோக்கிவந்த அவருக்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்ப்பு அளித்தனர்.இதனொருபகுதியாக  நள்ளிரவில் 25 க்கும் மேற்பட்ட கார்களில் ஆதரவாளர்களோடு தென்காசிமாவட்டத்திற்கு வருகைதந்த அவ்ருக்கு கொடிக்குறிச்சி  ஈனா விலக்கு பகுதியில் சசிகலா  ஆதரவாளர்கள் அதிமுக ஆதரவாளர்கள்,தொண்டர்கள் உள்ளிட்டோர் செண்டை மேளம், மேளதாளம்முழங்க மாலை பொன்னாடை போன்றவற்றை கொட்டும் மழையில் காத்திருந்து அவருக்கு வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர் தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற பிறகு சசிகலா அங்கிருந்து குற்றாலத்திலுள்ள தனியார் விடுதிக்கு தங்குவதற்கு புறப்பட்டு சென்றார்.வீ.கே. சசிகலா 17 ஆம் தேதி மாலை 4 மணிக்கு துவங்க உள்ள இந்த சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தென்காசிக்கு வருகை தந்த வீ.கே.சசிகலாவிற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Share via