சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை:  4 பேர்  கைது 

by Editor / 18-08-2021 03:58:03pm
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை:  4 பேர்  கைது 


ஜெயங்கொண்டம் அருகே ஆடு மேய்க்க சென்ற 13 வயது சிறுமியை, 4 பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து ள்ளது. இந்த கொடூரத்தை செய்த 4 பேரையும் போலீசார்கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்தவன் ரஞ்சித். இவன் அதே கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை கடத்தி சென்று கற்பழித்துள்ளான். 
மேலும், அந்த சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த மூன்றுபேர் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரஞ்சித் மற்றும் அந்த மூன்று நபர் மீது புகார் அளித்தார். 


புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via