தகாத உறவு.. கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி

by Editor / 26-04-2025 03:32:26pm
தகாத உறவு.. கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் ஊழியரான சிவா, 4 ஆண்டுகளுக்கு முன்பு தீப்தி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். தீப்தியிடம் இருந்து சிறிது காலமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த சிவா, சுஷ்மா என்ற வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனை அறிந்த தீப்தி, சுஷ்மா வசிக்கும் இடத்தை கண்டறிந்தார். உடனடியாக தீப்தி, தனது உறவினர்களுடன் சென்று சிவாவை கையும் களவுமாகப் பிடித்தார்.

 

Tags :

Share via