தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் ஓட்டினால்ரூ.25,000 அபராதம்,
தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யும் விதிமுறை இன்று (ஜூன் 1) முதல் அமலுக்கு வந்தது. மேலும், பிடிபடும் சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது எனவும் தமிழ்நாடு போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனங்களை இயக்கி விபத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Tags : தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் ஓட்டினால்ரூ.25,000 அபராதம்,