இந்தியாவின் முதல் நீர்வழி மெட்ரோ
கேரள மாநிலத்தில் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கொச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும் இந்த கனவுத் திட்டம் ரூ.1,136 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 78 மின்சார படகுகள் தண்ணீரில் பயணிகளுக்கு சேவை செய்யும். இந்த நீர்வழி மெட்ரோ திட்டம் பயணிகளின் வசதி, பாதுகாப்புக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்வதும் எளிது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Tags :