பேருந்தில் பெண் கூட்டு பலாத்காரம்

by Staff / 16-12-2023 02:52:48pm
பேருந்தில் பெண் கூட்டு பலாத்காரம்

உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் 20 வயது இளம்பெண்ணை பேருந்து ஓட்டுநர்கள் ஆரிப் மற்றும் லலித் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பஸ் கேபினில் அமர்ந்திருந்த பெண்ணை இருவரும் கூட்டு பலாத்காரம் செய்தனர். தகவலின் பேரில், போலீசார் பஸ்சை வழி மறித்து நிறுத்தினர். குற்றவாளிகளில் ஒருவரான லலித் தலைமறைவாக உள்ளார். இதற்கிடையே ஆரிப் கைது செய்யப்பட்டார். பேருந்தில் பயணிகள் குறைவாக இருந்ததால் அந்த இளம்பெண் கேபினில் அமர்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Tags :

Share via