செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20ல் தீர்ப்பு

by Staff / 15-09-2023 04:00:07pm
செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20ல் தீர்ப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அவர், காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து, செந்தில் பாலாஜியை சிறையின் அடைத்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மேலும், ஜாமீன் மனு மீதான வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் செப்.20ம் தேதி தீர்ப்பு வழங்க உள்ளது.

 

Tags :

Share via