உயர் ரக போதைப் பொருள்கள் பறிமுதல்

by Staff / 18-05-2023 03:44:57pm
உயர் ரக போதைப் பொருள்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் ரூ. 1, 80, 000/-மதிப்புள்ள உயர் ரக போதைப் பொருள்கள் பறிமுதல். விற்பனைக்கு வைத்திருந்த மூன்று நபர்கள் கைது. சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. பத்ரிநாராயணன், இ. கா. ப. , * அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் அன்று (17. 05. 2023) சூலூர் பகுதியில் *METHAMPHETAMINE-ஐ* விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர்* சம்பவ இடமான *நீலாம்பரில் உள்ள ஹோட்டல்* அருகே விரைந்து சென்று சோதனை மேற்கொண்ட போது உயர்ரக போதை பொருளான *METHAMPHETAMINE-ஐ* வைத்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு மகன் *வருண் (25)*, திவ்யேஷ் மகன் *நந்தகிருஷ்ணா (20)* மற்றும் முகமது அஷ்ரப் மகன் *முகமது அர்ஷத்(20)* ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து *ரூ. 1, 80, 000/- மதிப்புள்ள 60 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் (METHAMPHETAMINE)-ஐ* பறிமுதல் செய்து மேற்படி நபர்களின் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் *மாவட்ட காவல் கண்காணிப்பாளர்* அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த *01. 01. 2023 முதல் தற்போது வரை* கோவை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட *304 நபர்கள்* மீது *233 வழக்குகள்* பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் *462. 851 கிலோ கிராம்* எடையுள்ள *கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள்* பறிமுதல் செய்யப்பட்டும், மேலும் உயர்ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட *16 நபர்கள்* மீது *8 வழக்குகள்* பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் *109 கிராம்* எடையுள்ள *METHAMPHETAMINE* உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவார்கள் அல்லது சட்டம்-ஒழுங்கிற்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்ஸ்அப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

 

Tags :

Share via