போதை மாத்திரை விற்பனை.. 6 பேர் கைது

by Staff / 18-05-2023 03:35:19pm
போதை மாத்திரை விற்பனை.. 6 பேர் கைது

சென்னையில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலைத் தடுக்க `போதை தடுப்புக்கான நடவடிக்கை' என்ற பெயரில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சென்னையில் வலி நிவாரண மாத்திரைகளை, போதை பொருளாக விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 330 உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via